தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 2024 ஆண்டுக்கான பொங்கல் போனஸ் விரைவில் அறிவுப்பு வெளியாகும்
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் தமிழக அரசு அறிவித்து வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாட, ‘சி’ மற்றும் ‘டி’ குரூப் ரெகுலர் மற்றும் தற்காலிக அரசு ஊழியர்கள், ஊழியர்களுக்கு மாதம் 30 நாட்கள் என்ற அடிப்படையில் 30 நாள் ஊதியத்திற்கு சமமான அட்ஹாக் போனஸ் வழங்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் வழக்கமான நேர ஊதிய விகிதத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு அட்ஹாக் போனஸ் ரூ.1000/- முழு நேர மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு தற்செயல்கள் / சிறப்பு நேர ஊதிய விகிதத்தில் இருந்து வழங்கப்படும்.
TN Pongal Bonus GO 2024 PDF: பொங்கலை முன்னிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு போனஸ் ஜனவரி முதல் வாரத்தில் அறிவுப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
TN Govt Announces Pongal Bonus 2024 for Tamil Nadu Government Employees C, D Group Staffs Know Details Pongal Bonus 2023: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ்..! எவ்வளவு தெரியுமா..?
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ரூபாய் 3 ஆயிரம் வரை மிகை ஊதியம் எனப்படும் போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் போனஸ் அறிவிப்பு:
பொங்கலை முன்னிட்டு போனஸ் வழங்குவது தொடர்பாக, தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசின் நல திட்டங்களுக்கு, அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் (C & D Group) சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 என்ற உச்ச வரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.
தொகுப்பூதியம், சிறப்புக் காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து, சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
“சி” மற்றும் ‘டி” பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூபாய் 500 பொங்கல் பரிசு வழங்கப்படும்.
மேற்கூறிய மிகை ஊதியம் / பொங்கல் பரிசு வழங்குவதன் மூலம் அரசுக்கு 221 கோடியே 42 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ( நிதித்துறை ) வெளியிட்டுள்ளார்.